Date:

பாரிய வீழ்ச்சியில் பங்கு சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் இன்று முற்பகல் வேளையிலேயே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

Standard & Poor’s Sri Lanka 20 பங்கு விலைச்சுட்டெண் இன்றைய தினம் 10 வீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தமையினால் இவ்வாறு கொழும்பு பங்குச் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் உரிய நேரத்துக்கு முன்னதாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய Standard & Poor’s Sri Lanka 20 பங்கு விலைச்சுட்டெண் 10 தசம் 39 புள்ளிகளினால் அதாவது 314 தசம் 96 புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்து 2 ஆயிரத்து 716 தசம் 20 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6 தசம் 20 புள்ளிகளினால், அதாவது 552 தசம் 18 புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்து 8 ஆயிரத்து 351 தசம் 69 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொழும்பு பங்குச் சந்தையில் இன்று 2 கோடியே 55 இலட்சத்து 20 ஆயிரத்து 13 பங்குகள் பரிமாறப்பட்டுள்ளதுடன், பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 125 கோடியே 57 இலட்சத்து 59 ஆயிரத்து 330 ரூபா 60 சதமாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking News மைத்திரி சி.ஐ.டி.யில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது.   கடந்த...

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றம்

சில அமைச்சர் பங்களாக்களில் பெறுமதிமிக்க பகுதிகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று பொது...

தற்போது வீதிக்கு இறங்க தயாரா? – கர்தினால் ரஞ்சித்தை சீண்டும் ரணில் தரப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளன.  தற்போது நீங்கள் வீதிக்கு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373