Date:

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள்- ஜனாதிபதி ஊடகப் பிரிவு

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகோகொடை – ஜூபிலிகனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் திட்டமிட்ட கடும்போக்குவாதிகள் வன்முறைகளைத் தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரும்பு கம்பிகள், தடிகள் போன்றவற்றை தாங்கிய நபர்கள் போராட்டத்தில் வன்முறைகளை தூண்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கலகம் விளைவித்த பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் திட்டமிடப்பட்ட கடும்போக்குவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திட்டமிட்ட அடிப்படையில் சமூக ஊடகங்களின் வாயிலாக மக்களை தூண்டி நாட்டை அராஜக நிலைக்கு இட்டுச் செல்ல மேற்கோள்ளப்படும் முயற்சிகள் குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரூ.18 கோடியை ஏப்பம் விட்ட வங்கி அதிகாரி கைது

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி...

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதல்

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. தெற்கு சிரியாவில்...

அஞ்சல் திணைக்கள உதவி அத்தியட்சகராக பாத்திமா ஹஸ்னா

அஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா...

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்’: பொருளாதாரத் தடை: நேட்டோ எச்சரிக்கை

ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும்...