Date:

அரசியல் செய்வதற்குரிய நேரம் அல்ல, தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- பிரதமர்

இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று உரையாற்றினார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இது அரசியல் செய்வதற்குரிய நேரம் அல்ல, தேசத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்த அனைத்து தரப்பினரையும் அடுத்த அமர்வில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

“ஏப்ரல் புத்தாண்டு நெருங்கி வருவதால், அடுத்த சில நாட்களில் எரிபொருள் மற்றும் உணவு தீர்ந்துவிடும் என்று பொய்யான அச்சத்தை உருவாக்க வேண்டாம்,” என்று அவர் கூறினார்.

அரசாங்கம் கொரோனா வைரஸ் தொற்றுநோயை உருவாக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் சில பிரச்சினைகளுக்கு அரசாங்கமே காரணம் எனக் கூறி சிலர் பொதுமக்களிடம் செல்வாக்கு செலுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுமக்கள் எதிர்நோக்கும் பாரிய அசௌகரியங்களை அரசாங்கம் அறிந்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர், இயன்றளவு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைவோம்- ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய...

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம்

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2...

அனர்த்தங்களால் 6000 வீடுகளுக்கு முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...