நாட்டில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளது. கொழும்பு செட்டியார்தெரு தங்கசந்தையில் தற்போது தங்கத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (30) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 200000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 185000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தங்கத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த விலைக்கு விற்பனை செய்வதற்கு தங்கம் இல்லை என்றும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு தேவையாயின் அவர்கள் வழங்கும் தங்கத்தைக் கொண்டு மாத்திரம் தங்க நகைகளை தயாரிக்க முடியும் என்று கூறுகின்றனர்.