Date:

வாகன இலக்கத் தகடுகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய தீர்மானம்

இலங்கையில் முதல் தடவையாக கொலன்னாவையில் அரச தொழிற்சாலை ஊடாக வாகன இலக்கத் தகடுகளை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் தடவையாக வாகன இலக்கத் தகடுகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதன் மூலம் , வருடம் தோறும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பெரும் தொகையான பணத்தை சேமிக்க முடியும்.

உள்ளூர் தனியார் நிறுவனம் மூலம் தற்போது நடைமுறைப்படுத்தப்படும், வாகன இலக்கத் தகடுகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் 2024 ஆம் ஆண்டு காலாவதியாகவுள்ளதுடன், அதன் பின்னர் அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தினால் இந்த இலக்கத் தகடுகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ளன.

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களின்படி, நாட்டில் ஒவ்வொரு வருடமும் சுமார் 5 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அத்துடன் வருடாந்தம் குறைந்தது 10 இலட்சம் இலக்கத் தகடுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் , சுமார் 600 மில்லியன் ரூபாவினை வெளிநாட்டுக்கு செல்லவிடாமல் சேமிக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டோருக்குப் பிணை

சர்ச்சைக்குரிய கரம் பலகைகள் பரிவர்த்தனை தொடர்பான மற்றொரு வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை...

மருத்துவர்கள் வெளியேறுவதால் நாட்டுக்கு சிக்கல்

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளில்...

ஓய்வூதியம் கேட்டு ஜெனீவா செல்லும் முன்னாள் எம்.பிக்கள்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்வதை எதிர்த்து ஓய்வு பெற்ற...

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்

தற்போது கோழி இறைச்சியின் விலை அதிகரித்து, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி...