Date:

போதிய மழை இன்மையால் நீர் மின் உற்பத்தி குறைவு

நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய பகுதிகளில் போதிய மழையின்மையால் பொதுவாக அவற்றின் நீர்மட்டத்தில் 28% ஆகக் குறைந்துள்ளன. இதனால் நீர் மின் உற்பத்தி 20% குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலா ளர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த சில நாட்களில் போதிய மழை பெய்யாவிட்டால், 10 நாட்களின் பின் பல நீர்த்தேக்கங்களில் இருந்து மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சமனலவெவவின் நீர் மட்டம் 12% ஆகவும் காசல்ரீ நீர் மட்டம் 10% ஆகவும் குறைந்துள்ளன.

மூன்று மாதங்களுக்கு முன்பு, நாட்டின் நாளாந்த மின்சாரத் தேவையில் 70% நீர் மின்சாரத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு, தற்போது 20% ஆகக் குறைந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையின் அடிப்படையில் அனல் மின் நிலையங்கள் தொடர்ந்து இயங்கி தேவையான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன.

இதேவேளை நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலுள்ள மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் தற்போது இயங்கி வருகின்ற போதிலும், எதிர்காலத்தில் பராமரிப்புக்காக குறைந்தபட்சம் ஒன்றையாவது நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்காவை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

அமெரிக்காவின் (USA) அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக...

இன்று மீண்டும் கூடவுள்ள குழு

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய...

ரூ.18 கோடியை ஏப்பம் விட்ட வங்கி அதிகாரி கைது

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி...

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதல்

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. தெற்கு சிரியாவில்...