Date:

போதிய மழை இன்மையால் நீர் மின் உற்பத்தி குறைவு

நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய பகுதிகளில் போதிய மழையின்மையால் பொதுவாக அவற்றின் நீர்மட்டத்தில் 28% ஆகக் குறைந்துள்ளன. இதனால் நீர் மின் உற்பத்தி 20% குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலா ளர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த சில நாட்களில் போதிய மழை பெய்யாவிட்டால், 10 நாட்களின் பின் பல நீர்த்தேக்கங்களில் இருந்து மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

சமனலவெவவின் நீர் மட்டம் 12% ஆகவும் காசல்ரீ நீர் மட்டம் 10% ஆகவும் குறைந்துள்ளன.

மூன்று மாதங்களுக்கு முன்பு, நாட்டின் நாளாந்த மின்சாரத் தேவையில் 70% நீர் மின்சாரத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு, தற்போது 20% ஆகக் குறைந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையின் அடிப்படையில் அனல் மின் நிலையங்கள் தொடர்ந்து இயங்கி தேவையான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன.

இதேவேளை நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலுள்ள மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் தற்போது இயங்கி வருகின்ற போதிலும், எதிர்காலத்தில் பராமரிப்புக்காக குறைந்தபட்சம் ஒன்றையாவது நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...