Date:

மின்சார கட்டணத்தை அதிகரிக்காதிருக்க அவதானம்

தடையின்றி மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் வரை உத்தேச மின்சார கட்டணத்தை அதிகரிக்காதிருப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ஒரு மின் அலகு உற்பத்திக்கு 40 ரூபா செலவிடப்படுகிறது.

எனினும், ஒரு மின் அலகுக்கு 8 ரூபாவுக்கும் குறைவான கட்டணமே அறிவிடப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்தும் விநியோகத்தை முன்னெடுத்து செல்வதற்கு உற்பத்தி செலவினங்களுக்கு ஏற்றவகையில் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய, அமைச்சரவையினால் மின்சார சபையிடம் இருந்து மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை கோரப்பட்டிருந்தது.

இதன்படி, குறித்த யோசனை தற்போது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை, நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நீர்வழங்கல் அமைச்சுக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். பலப்பிட்டிய...

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த...