Date:

கண்டியில் உள்ள லிட்ரோ எரிவாயு விநியோக நிலையத்திற்கு அருகில் பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

கண்டியில் எரிவாயு சிலிண்டர்களை வாங்கும் வரிசையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த மோதலில் பொதுமக்களைத் தாக்க மரக் கட்டைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் போது பொலிஸ் அதிகாரியும் காயமடைந்தார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டியில் உள்ள லிட்ரோ எரிவாயு விநியோக நிலையத்திற்கு அருகில் பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

எரிவாயு சிலிண்டர்களை பெறுவதற்காக நேற்றுமுன்தினம் இரவு முதலே ஏராளமானோர் வரிசையில் நின்று கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் வரிசையில் நின்ற மக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் கற்களாலும் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிலர் இரத்த காயங்களுடன் சிகிச்சை பெற சென்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...

ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) பகுதிக்கு மேற்கே இன்று (07)...