Date:

இந்தியா வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

எதிர்வரும் 26 – 30 ஆம் திகதிகளில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மாலைதீவு மற்றும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹித் மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரின் அழைப்பின் பேரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இரு நாடுகளுக்கும் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, முதலில் மாலைத்தீவுக்கு விஜயம் செய்யும் அவர், மார்ச் 26 – 27 ஆம் திகதிகளில் ஜனாதிபதி இப்ராஹிம் சோலி, வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித்துடன் கலந்துரையாடவுள்ளார்.

இதனையடுத்து, இலங்கைக்கான விஜயத்தை ஆரம்பிக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர், எதிர்வரும் 28 – 30 ஆம் திகதிகளில் இலங்கையின் முக்கிய தரப்பினர்களை சந்திக்கவுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 29 ஆம்திகதி கொழும்பில் நடைபெறும் BIMSTEC அமைச்சர்கள் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டு ஆண்கள் எப்படி ஒரு குடும்பத்தை உருவாக்க முடியும்?

பேருவளையில் உள்ள புனித மரியா தேவாலயத்தில் நடைபெற்ற மத விழாவில் உரையாற்றிய...

விருந்துபசாரம் சுற்றிவளைப்பு – இளம் பெண் உட்பட 21 பேர் கைது

கடுவெல வெலிவிட்ட பகுதியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல் விருந்தில்...

இலங்கையின் 49 ஆவது பிரதம நீதியரசர் பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி...

விஜய் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அதிர்ச்சியில் தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக...