Date:

சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்த இ.தொ.காங்கிரஸ் ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள உள்ளதா?!

அண்மையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணித்திருந்தது.

நாட்டின் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மீது அதிருப்தி கொண்டிருப்பதால் அந்த மாநாட்டை புறக்கணித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.

எனினும் அவர் தமக்கு அமைச்சுப் பதவியை கோரியதாகவும் அதற்கு அரசாங்கம் மறுப்பு தெரிவித்த நிலையிலேயே சர்வகட்சி மாநாட்டை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணித்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த தகவலும் உண்மைக்கு புறம்பானது என்று ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதியின் மீது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதிருப்தி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஜனாதிபதியுடன் கரிசனைக்குரிய முக்கிய விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அவரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஜீவன் தொண்டமானை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவ்வாறான நிகழ்ச்சித்திட்டம் ஒன்று இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பலஸ்தீன் – காஸாவில் இடம்பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட குனூத்துன் நாஸிலா ஓதிவருமாறு கோரிக்கை

பலஸ்தீன் – காஸாவில் சுமார் 23 மாதங்களாக தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும்...

மித்தெனிய இரசாயனங்கள் – அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை வௌியானது

மித்தேனிய பகுதியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரசாயன மாதிரிகள் தொடர்பான அரச பகுப்பாய்வாளரின்...

காஸாவுக்கு ஆதரவாக மொரோக்கோ செயற்பாட்டாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

காஸாவுடனான ஒருங்கிணைந்த சர்வதேச ஆதரவுச் செயற்பாட்டின் ஒரு பகுதியாக, கடந்த செவ்வாய்கிழமை...

விமானப்படை புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர் கைது

விமானப்படை புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர், 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள...