2021ஆம் ஆண்டு இரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து விளைச்சல் குறைந்து பயிரின் தரம் குறைவது குறித்து விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த செயற்பாட்டினால் விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தமது நகைகள் மற்றும் சொத்துக்களை அடமானம் வைத்து பயிர்ச்செய்கைக்காக பணம் திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும். பயிர்ச்செய்கை எதிர்பார்த்தளவுக்கு இலாபகரமானதாக அமையவில்லை எனவும் ஹிங்குராங்கொட பிரதேச விவசாயி கேஷர விதானகே விசனம் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து இவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
‘நாங்கள் சுமார் 200 ஏக்கரில் விவசாயம் செய்கிறோம் உங்களுக்கு இது போன்ற தரத்தில் குறைந்த நெல் கிடைத்தது தங்க நகைகள் மற்றும் உழவு இயந்திரங்களை அடகு வைத்தே இந்த அறுவடைக்கு தேவையான பணத்தை திரட்டினோம். கரிம உரம் மற்றும் நானோ நைட்ரஜனைப் பயன்படுத்துவதன் மூலம் இத்தகைய அறுவடை பெறப்பட்டது எனவும் தெரிவித்தார்