Date:

எரிபொருள் தட்டுப்பாடு பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள சுற்றுலா பயணிகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு,எரிவாயு நெருக்கடி, மின்சார தடை ஆகியன காரணமாக மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன் காரணமாக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதுடன், பெரும் சவாலாக மாறியுள்ளதுடன், அந்நிய செலாவணியும் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் தடைப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கை நல்ல நாடு, நல்லவர்களும் உள்ளனர்.இலங்கைக்கு வருமாறு அரசாங்கம் எங்களை அழைக்கிறது.ஆனால் இங்கு எரிபொருள் இல்லையென நுவரெலியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முச்சக்கரவண்டியில் இலங்கை வந்த சுற்றுலா பயணி ஒருவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் கட்டுநாயக்காவிலிருந்து வெளியேறி வாடகைக்கு முச்சக்கர வண்டியை அமர்த்தி இலங்கையின் அழகைப் பார்க்கத் திட்டமிட்டேன்.கடந்த 21 ஆம் திகதி நுவரெலியாவிற்கு வந்த நான் 22 ஆம் திகதி எல்ல பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்தேன்.

கட்டுநாயக்காவிலிருந்து முச்சக்கர வண்டியில் செல்லும் இடமெல்லாம் பெற்றோலை வாங்குவதற்காக முச்சக்கரவண்டியில் பிளாஸ்டிக் போத்தலை வைத்திருப்பேன். தற்போது கிடைக்கும் பெற்றோலைக் கொண்டு முடிந்தவரை முச்சக்கரவண்டி செல்கின்றது, ”என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் அந்நிய செலவாணியை ஈட்டும் துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்றாகும். எனினும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாவுக்கு சிறந்த நாடு எனும் சிறப்புரிமையை இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

Breking நிலந்த ஜயவர்தன, பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...

(Clicks) அமைச்சர் விஜித ஹேரத் – பிரபல நடிகர் ரவி மோகன் சந்திப்பு

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன், பாடகி கெனீஷா பிரான்சிஸ் மற்றும்...

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியின் மகன் அதிரடி கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் கைது...