Date:

மக்களுக்கு முடிந்தவரை அரசாங்கம் நிவாரணங்களை வழங்கும்-எஸ்.பி.திஸாநாயக்க

உலகில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள மட்டத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் விலைகள் சிறந்த மட்டத்தில் இருப்பதாக கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் சமையல் எரிவாயு, டீசல் பெட்ரோல் போன்றவற்றின் விலைகள் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனினும் இலங்கையில் குறைந்தளவிலேயே அவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

தற்போதும் ஆசியாவிலேயே இலங்கையிலேயே குறைந்த விலையில் இவை விற்பனை செய்யப்படுகின்றன. மக்கள் கஷ்டத்து உள்ளாகி இருப்பது உண்மை என்றாலும் மக்களுக்கு முடிந்தவரை அரசாங்கம் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் டொலர் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள், எரிவாயும் மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலைகள் மாத்திரமல்லது அத்திவசியமற்ற பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

விலை அதிகரிப்புக்கு ஏற்ப மக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை என்பதால், இலங்கை மக்கள் பெரும் பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...