Date:

எரிவாயு தட்டுப்பாடு மண்ணெண்ணெய் பாவனை அதிகரிப்பு

தற்போது நிலவும் சமையல் எரிவாயுவின் தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டில் மண்ணெண்ணெய் பாவனை அதிகரித்துள்ளது.

பொதுவாக நாட்டில் நாளாந்த மண்ணெண்ணெய் பாவனை கடந்த காலத்தில் 600 மெற்றிக் தொன்களாகும். ஆனால் தற்போது நாளாந்த பாவனை 850 மெற்றிக் தொன்களாக அதிகரித்துள்ளது.

மண்ணெண்ணெயை விற்பனை செய்யும் எரிபொருள் நிலையங்களுக்கு ஆகக் கூடுதலான வகையில், மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு இல்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ,நாட்டில் எதிர்வரும் சில தினங்களில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு முழு அளவில் நிவர்த்திக்கப்படும் என்று லிட்றோ எரிவாயு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

எரிவாயு நிரப்பப்பட்ட ஒரு லட்சம் சிலிண்டர்கள் நேற்று பகிர்ந்தளிக்கப்பட்டன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் கடந்த வெள்ளிக்கிழமை பகிர்ந்தளிக்கப்பட்டதாக எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன்...

அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டியில் வீடமைப்பு கடன்

சலுகை வட்டி விகிதத்தில் அரச ஊழியர்களுக்கான வீடமைப்பு மற்றும் ஆதனக் கடன்களை...

ஆசிரியர், அதிபர் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

கஷ்டப் பிரதேச சேவையிலுள்ள ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அதிபர்கொடுப்பனவுகளில் அதிகரிப்பு கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில்...

இறக்குமதி செய்யப்படும் துணி மீதான செஸ் வரி நீக்கம்

இறக்குமதி செய்யப்படும் துணி மீதான செஸ் வரியை நீக்கி பெறுமதி சேர்...