Date:

அரச ஊழியர்கள் தாமத வருகை பதிவு ஆவண முறையில் சலுகை

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி முடியும் வரை, அரச ஊழியர்கள் தாமதமாக வருவதற்கு சலுகை அல்லது முன்னர் பயன்பாட்டிலிருந்த வருகை பதிவு ஆவண முறையை பயன்படுத்துமாறு அரசாங்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

 

மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், உரிய நேரத்திற்கு பணிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அரச ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

 

எனவே கைரேகை பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தும்போது, தாமதமாக வருபவர்களுக்கு சலுகை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே.திலகரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...