நாட்டில் இன்றைய தினமும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, A முதல் L வரையான 12 வலயங்களில் காலை 8 மணியில் இருந்து மாலை 6 மணி வரையிலான காலப்பகுதியில்மூன்று மத்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், குறித்த பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு11 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மத்தியாலமும் 40 நிமிடங்களும்மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், P முதல் W வரையான 8 வலயங்களில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில்இரண்டு மணிநேர மின் விநியோகத்தடை அமுலபடுத்தப்படவுள்ளது.
மேலும், குறித்தப் பகுதிகளில் பிற்பகல் 05 மணி முதல் 10 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மத்தியாலமும் 15 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது.