Date:

தேவையில்லாமல் டீசலை பதுக்கி வைப்பதை உடனடியாக தடுக்க வேண்டும்- எரிசக்தி அமைச்சின் செயலாளர்

இலங்கையில் டீசல் பயன்படுத்தும் பொது மக்களுக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி தொடர்ந்து தேவையில்லாமல் டீசலை சேமிக்கும் பட்சத்தில் டீசல் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொதுமக்களின் இந்த செயற்பாடு கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு வழிவகுக்கும். தேவையில்லாமல் டீசலை பதுக்கி வைப்பதை உடனடியாக தடுக்க வேண்டும்.

எரிபொருளை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் உள்ள போதிலும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினை காரணமாக டீசல் இறக்குமதியில் பிரச்சினை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொது மக்கள் எரிபொருள் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசைகளில் நிற்பதை தொடர்ச்சியாக அவதானிக்க முடிகிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking புதுடெல்லியில் குண்டுவெடிப்பு: பாரிய சேதம்

இந்தியா தலைநகர் புதுடெல்லியில் செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது...

பல கோடி பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்பு

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான...

ஒரே நாளில் 1,000 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள்; 1,284 பேர் கைது

விஷப் போதைப்பொருட்களை நாட்டிலிருந்து அகற்றும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின்...

இரட்டை கொலைத் தொடர்பில் 6 பேருக்கு மரண தண்டனை

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண...