Date:

இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை – இலங்கைக்கு பயணம் செய்யும் தனது பிரஜைகளிற்கு எச்சரித்த பிரிட்டன்

இலங்கையில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமை காரணமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து பிரிட்டன் தனது நாட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரிட்டன் தனது பயண ஆலோசனை அறிக்கையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கையில் மருந்துகள்,எரிபொருள் உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களிற்கு பற்றாக்குறை நிலவுகின்றது என பிரிட்டன் தனது நாட்டிலிருந்து இலங்கை செல்லவிரும்பும் பயணிகளிற்கு எச்சரித்துள்ளது.

இறக்குமதிகளிற்கான அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக இலங்கை அடிப்படை பொருட்களிற்கான தட்டுப்பாட்டினை எதிர்கொள்கின்றது,கடைகள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மருந்தகங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கலாம்,என பிரிட்டன் தெரிவித்துள்ளது.

மின்வெட்டுக்கான சாத்தியங்கள் உள்ளது எனவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

டெங்கு கொரோனா வைரஸ் குறித்தும் பிரிட்டன் எச்சரித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொடரும் துப்பாக்கிப் பிரயோகச் சம்பவங்கள் இன்று ஹூங்கம பகுதியில்

அம்பலாந்தோட்டை, ஹூங்கம, பிங்கம பகுதியில் இன்று (2) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்...

கண்டியில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின்...

மோசடி வௌிநாட்டு வேலைவாய்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக 567 வழக்குகள் தாக்கல்

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையாக கடந்த...

பேருந்து கவிழ்ந்து விபத்து : பலர் காயம்

கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று...