Date:

நாடு வீழ்ச்சியில் மக்கள் துன்பத்தில்

எரிபொருள் நெருக்கடி காரணமாக முழு நாடும் செயலிழந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துல தெரிவித்துள்ளார்.

மக்கள் தமக்கான ஒரு வேளை உணவை தேடிக்கொள்வதிலும் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். முழு நாடும் செயலிழந்துள்ளது.

எரிபொருள் பிரச்சினை காரணமாக மின்சாரமும் துண்டிக்கப்படுவதால் மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர். போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் இலங்கையில் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.டீசல் விலை அதிகரிக்கப்பட்டமையால், அனைத்து பொருட்களின் விலைகளும் இரண்டு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

காய்கறிகள் இலங்கையில் டீசல் வாகனங்களில் எடுத்துச் சென்றே விநியோகிக்கப்படுகின்றன. மீன் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் நாம் எண்ணிப் பார்க்காத அளவுக்கு அதிகரிக்கும்.

நாட்டில் தற்போது காணப்படும் உணவு வீக்கம் மேலும் அதிகரித்து மக்களுக்கு மூன்று வேளை அல்ல ஒரு வேளை கூட சாப்பிட முடியாமல் போகும் எனவும் அலவத்துவல கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...

யோஷிதவுக்கு அதிகுற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார்...

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க...