கடல் மார்க்கமாக நாட்டிற்கு கடத்தப்பட்ட ஒருதொகை கேரள கஞ்சா, விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று (13) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
சுமார் 570 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா தொகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி 84 மில்லியன் ரூபா வரை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நீர்கொழும்பு – லெல்லம பிரதேசத்தில் சட்டவிரோதமான இந்த போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
இதுதொடர்பில் நீர்கொழும்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.