நேற்றைய தினமும், நாடளாவிய ரீதியில், பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் மண்ணெண்ணெய்யை பெற்றுக்கொள்வதற்கும் மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
இதேவேளை, நாட்டின் சகல நகரங்களிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் மற்றும் டீசல் என்பன விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
எனவே மக்கள் வரிசையின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள இதன்மூலம் சந்தர்ப்பம் ஏற்படும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் வரிசையில் காத்திருக்கும் செயற்பாடு எதிர்வரும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைக்குள் குறைவடையும் என வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
20, 000 மெட்ரிக் டன் எரிபொருள் களஞ்சியசாலைகளில் கையிருப்பில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.