சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மற்றும் வெதுப்பங்கள் என்பவற்றுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக சில வெதுப்பகங்கள் மற்றும் உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் வெதுப்பக உற்பத்திகளை விற்பனை செய்வதில் பிரச்சினையை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

                                    




