Date:

சீன நாட்டின் கழிவுகள் சேதன பசளை பெயரில் இலங்கைக்கு

சீன நாட்டின் கழிவுகளை இலங்கைக்கு கொண்டு வந்து அதனை சேதன பசளை என கூறி விவசாயிகளுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும் என நுவரெலியா – பதுளை வீதியில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டிடத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே விவசாயிகளை இல்லாமல் செய்து இலங்கை நாட்டை சீனாவின் காலனியாக மாற்றுவதே அரசாங்கத்தின் இந்த திட்டமிடப்பட்ட சதியாகும்.
May be an image of 5 people, people standing, crowd and outdoors
இதற்கு விவசாயிகள் ஒரு போதும் ஒத்துழைக்க மாட்டார்கள் என நுவரெலியா விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இரசாயன உர தட்டுப்பாடு தொடர்பாக நுவரெலியா விவசாயிகள் , சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று (05) காலை நுவரெலியா – பதுளை வீதியில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டிடத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் ஊர்வலமாக நுவரெலியா நகரின் மத்தியில் அமைந்துள்ள கவிதாஸ் திடலிற்கு முன்பாக கூடி நின்று தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன்போது நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் சுசில்சாந்த, செயலாளர் அருணசாந்த,  உறுப்பினர் சந்தியராஜன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம்,  ஜக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா அமைப்பாளர் தினேஸ் கிருசாந்த கீகனகே உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அதிவேக நெடுஞ்சாலை பயணிகளுக்கான அறிவிப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி கொடுப்பனவை மேற்கொள்ளும்...

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட தேர்தலுக்கான இடைக்காலத் தடை நீக்கம்

கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக எதிர்வரும் மே...

இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து IMF விளக்கம்

உலகளாவிய அதிர்ச்சிகளின் தாக்கத்தை இலங்கையில் மதிப்பிடுவதற்கு மேலும் காலம் தேவை என்று...

விசேட போக்குவரத்து சேவைகள்

பண்டிகை காலத்தில் விசேட போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 500 பஸ்கள்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373