நாளை சனிக்கிழமை இரவு 8 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிவரை கொழும்பு 7, 8, 10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் 14 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு 2,3 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறித்த காலப்பகுதியினுள் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகிக்கப்படும் என்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.