நாட்டில் இன்றைய தினமும் சுழற்சி முறையில் ஏழரை மணிநேர மின்வெட்டு அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 5 மணி நேரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
அத்துடன், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் இரண்டரை மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.