ஒரு நாடு – ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக் குழுவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், இது சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை நேற்று வெளியிட்டுள்ளார்.
ஒரு நாடு – ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் பதவிக்கலாம் நேற்றுடன் முடிவடைந்தது.
நாடு முழுவதும் உள்ளடங்கும் வகையில் மக்களிடம் விரிவான முறையில் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற வேண்டும் என்பதால், செயலணிக்குழுவின் பதவிக் காலத்தை நீடித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.