வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட, விடுதலைப் புலிகளுடையது என கூறப்படும் தற்கொலை தாக்குதல் படகொன்று முல்லைத்தீவு, சாலை கடற்கரைப் பகுதியில் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
சாலைப்பகுதியில் தொழில் செய்துவரும் மீனவர் ஒருவர் நிலத்தில் புதைந்த படகினை மீட்டு இரண்டாக வெட்டியபோது படகிற்குள் வெடிபொருட்கள் பொருத்தப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.
இது தொடர்பில் உடனடியாக இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற படையினர் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் வெடிமருந்து நிரப்பப்பட்ட படகு குறித்து விசாரணையினை மேற்கொண்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியின் அனுமதியுடன் படகினை மீட்டுள்ளனர்.
படகில் பொருத்தப்பட்டிருந்த பெருமளவான வெடிபொருட்கள் சிறப்பு அதிரடிப்படையினரால் அகற்றப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தகர்த்து அழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


                                    




