Date:

எரிபொருள் பற்றாக்குறையால் பஸ் போக்குவரத்து 50% குறைந்துள்ளது -தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்

எரிபொருள் கிடைப்பதன் அடிப்படையில் இன்று பஸ் பயணங்கள் 50 வீதத்தால் குறைக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய வழக்கமாக ஆறு பயணங்களை முன்னெடுக்கும் பஸ்கள் இன்று மூன்று பயணங்களை மாத்திரமே மேற்கொள்ளும் என சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

போதுமான எரிபொருள் இருந்தால் மாத்திரமே பஸ்களை இயக்க முடியும் எனவும் பிற்பகலில் பஸ் பயணத்தைக் குறைக்குமாறு நடத்துநர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அலுவலக நேரங்களிலும் மற்றும் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குச் செல்லும் போதும் காலையிலும் மாலையிலும் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும்.

எரிபொருள் வழங்கும் போது பஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இருப்பினும் பெரும்பாலான நிரப்பு நிலையங் களில் நேற்று டீசல் இல்லை.இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“முஹம்மத்திடமிருந்து கற்க வேண்டும்”

நமது நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தில், நாட்டிற்கு அபிவிருத்தியும் சேவைகளும்...

ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஹவுதி படை

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின்...

ஈரான் தாக்குதலில் இலங்கைப் பெண்கள் இருவர் காயம்

இஸ்ரேல் முழுவதும் ஈரானிய ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொண்டு வரும் நிலையில் இதனால்...

Justin அமெரிக்காவுடன் இனிப் பேசி அர்த்தமில்லை -ஈரான்

இஸ்ரேலின் “அநாகரிகமான” தாக்குதல்கள் தொடரும் நிலையில், அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373