மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு கப்பலில் 28,500 மெட்ரிக் டொன் ஆட்டோ டீசல் மற்றும் 9,000 மெட்ரிக் டொன் ஜெட் எரிபொருள் இருந்ததாகவும் ,மற்றைய கப்பலில் 30,300 மெற்றிக் டொன் ஆட்டோ டீசலும் 7000 மெற்றிக் டொன் சுப்பர் டீசலும் இருந்ததாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பல்கள் சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வந்தடைந்துள்ளது.
இதேவேளை, 30 மில்லியன் டொலர் பெறுமதியான 38,400 மெற்றிக் டொன் பெற்றோலை நாளை முதல் விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.