Date:

ஸ்ரீலங்கன் அயர்லைன்ஸ் இலங்கைக்கே உரிய உணவுகளை அறிமுகப்படுத்த  நடவடிக்கை

ஸ்ரீலங்கன் விமானப் பயணிகளுக்கு இலங்கைக்கே உரிய உணவுகளை அறிமுகப்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ளது. போஷாக்குமிக்க தேசிய உணவை, விமானப் பயணிகளுக்கு வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் செரன்டிப் மண்டபத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையின் இந்த தேசிய உணவை படிப்படியாக தமது விமானப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்த எண்ணியுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இலங்கை தொடர்பான தமது முதல் அனுபவத்தை விமானத்திலேயே பெற்றுக்கொள்கின்றனர்.

இதனால்,இவ்வாறான திட்டத்தை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ...

டான் பிரியசாத்தின் படுகொலை: மூவர் கைது

சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில்...

சிலாபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு

சிலாபம் நகரில் அண்மையில் பெய்த மழை காரணமாக சில வீதிகளில் வெள்ளம்(23)...

இத்தாலிக்கு சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373