Date:

நிலைப்பாட்டில் மாற்றமில்லை

அரசியல் ரீதியானதும் இன ரீதியான சிறுபான்மை கட்சிகளும் இந்த விடயம் தொடர்பில் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வரவேண்டுமென்ற உறுதியான நிலைப்பாட்டில்  இருக்கின்றோம்  என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று (30) நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விகிதாசார தேர்தல் முறை எக்காரணம் கொண்டும் மாற்றப்படக் கூடாதென்ற தீர்மானத்தில் இருக்கின்றோம். இம்முறை மாற்றப்படுமானால் இந்த விகிதாசார முறையின் கீழ்  அரசியல் ரீதியிலான சிறுபான்மை கட்சிகள் இன ரீதியான சிறுபான்மை கட்சிகளுக்குக் கிடைக்கக்கூடிய எல்லா பிரதிநிதித்துவங்களும் இல்லாமற் போகும் என்றார்.

“தேர்தல் முறைமையில் மாற்றங்கள் ஏற்படும் போது  பாராளுமன்றம்  மாகாண சபை  உள்ளூராட்சி மன்றங்களில் இருக்கக் கூடிய எல்லா பிரதிநிதித்துவங்களும் அதேயளவிலேயே  உறுதிப்படுத்தப்பட்டு காப்பாற்றப்பட்டு மேலே செல்ல வேண்டுமே தவிர அதை இல்லாதொழிக்கும் எந்தவொரு செயற்பாட்டுக்கும் நாங்கள் உடன்பட மாட்டோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அருவக்காலு குப்பை திட்டத்துக்கு எதிரான புத்தளம் மாநகர சபையின் உறுதியான தீர்மானம்

புத்தளம் மாநகர சபையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், அருவக்காலு தின்மக்கழிவு செயற்திட்டத்திற்கு...

மீண்டும் அதிகரித்து செல்லும் தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தொடர்ந்தும் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் இன்றும்...

ஆப்கானிஸ்தானில் பசியால் வாடும் குடும்பங்கள்

ஆப்கானிஸ்தானில் 10 இல் 9 குடும்பங்கள் பசியால் வாடுகின்றன எனவும் கடனில்...