ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் இன்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பானது இன்று (24) பிற்பகல் 3.30 அளவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய வேதன கொள்கை மற்றும் வைத்தியர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சியின் தோல்வி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.