Date:

வத்திகானுக்கு புறப்பட்ட மெல்கம் ரஞ்சித்

கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று முன்தினம் வத்திகானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பேராயர் தனது இந்த பயணம் தொடர்பாக கத்தோலிக்க திருச்சபையின் உறுப்பினர்களுக்கு தெரிவித்திருந்த போதிலும் பயண திகதி மற்றும் பயணத்தின் கால எல்லை தொடர்பாக அறிவிக்கவில்லை என திருச்சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வருடந்தோறும் பேராயர் வத்திகானுக்கு பயணம் மேற்கொள்ள வழக்கம் எனவும் கோவிட் தொற்று நோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் பேராயர் வத்திகானுக்கு விஜயம் செய்யவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு கட்டாயம் வத்திகானுக்கு விஜயம் செய்ய உள்ளதாக பேராயர் திருச் சபையின் குருக்களுக்கு அறிவித்திருந்தார். எனினும் பயணம் செய்ய போகும் நாள் மற்றும் பயணத்தில் கால எல்லை பற்றி எதனையும் தெரிவிக்கவில்லை.

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் இந்த விபரங்களை வெளியிடவில்லை எனவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கர்தினால், வருடந்தோறும் ரோமுக்கு விஜயம் செய்து, உலகில் ஏனைய நாடுகளின் கர்தினால்களை சந்தித்து தகவல்களை பரிமாறிக்கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்துவதுண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கையர்…

இன்று (16) காலை பினைக் பிராக் (Bnei Brak) பகுதியில் ஈரானிய...

கொழும்பு மேயராக வ்ரே காலி பால்தசார் தெரிவு

இன்று திங்கட்கிழமை (16) காலை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பைத் தொடர்ந்து, கொழும்பு மாநகர...

கொழும்பு மாநகர சபை; அமர்வில் பதற்றம்

மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலைத் தொடர்ந்து,...

கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவுக்கான தேர்தல் இன்று

கொழும்பு மாநகர சபையின் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இதற்கான...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373