Date:

இலங்கையில் கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும்-மு.க ஸ்டாலின்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள, இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தொடரும் மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கைதான மீனவர்களும், அவர்களுடன் படகுகளுடன் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கை இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவரும் இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை குழு உறுப்பினருமான என்.தேவதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் ஊடாகவே இந்த பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை பெறமுடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...