Date:

இலங்கையில் கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும்-மு.க ஸ்டாலின்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள, இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தொடரும் மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கைதான மீனவர்களும், அவர்களுடன் படகுகளுடன் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கை இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவரும் இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை குழு உறுப்பினருமான என்.தேவதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் ஊடாகவே இந்த பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை பெறமுடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...