Date:

யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் பரிசீலனை நிறைவு

யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனைகளை உயர்நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.

அதற்கமைய, இந்த வழக்கை தொடர்ந்தும் விசாரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமை மனுக்களும், சட்ட அடிப்படையற்றவை என்பதால், அவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் நேற்று உயர்நீதிமன்றை கோரியிருந்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அளுவிஹாரே, ப்ரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரி.பி. தெஹிதெனிய ஆகியோரடங்கிய ஐவர் கொண்ட ஆயம் முன்னிலையில் நேற்று குறித்த மனுக்கள் பரிசீலனைக்கு அழைக்கப்பட்டன.

இதன்போது தமது சமர்ப்பணத்தை முன்வைத்த சட்டமா அதிபர் குறித்த மனுக்கள் அடிப்படையற்றவை என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல்

சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல்...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...