Date:

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?

நிதியமைச்சினால் எரிபொருளுக்கு வரிச்சலுகை வழங்கப்படாவிட்டால் மீண்டும் எரிபொருள் விலையினை அதிகரிக்க வேண்டிய தேவையேற்படும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஹங்வெல்ல பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அந்நிய செலாவணி பிரச்சினையினால் நாடு பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக எரிபொருள் கொள்வனவின் போது, அரசாங்கத்தினால் வரிச்சலுகை வழங்கப்பட வேண்டும்.

அதிக விலைக்கு கொள்வனவு செய்து, குறைந்த விலையிலேயே நாட்டில் எரிபொருளை விநியோகித்து வருகின்றோம்.

இதனால், மீண்டும் எரிபொருள் கொள்வனவுக்கான நிதி கையிருப்பில் இல்லாது போகும்.

எனவே, அரசாங்கம் வரிச்சலுகை வழங்காவிட்டால் எதிர்காலத்தில் ஒரு லீற்றர் டீசல் 52 ரூபாவாலும், ஒரு லீற்றர் பெற்றோல் 19 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒன்றிணைவோம்- ஜனாதிபதி

அண்மைய அனர்த்தம், நிலைபேறாகவும் படிப்படியாகவும் வளர்ச்சியடைந்து வந்த நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய...

முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீளக் குடியமர்த்த திட்டம்

நிவாரண முகாம்களில் தற்போது சுமார் 7,000 பேர் தங்கியுள்ளதாகவும், அவர்களை 2...

அனர்த்தங்களால் 6000 வீடுகளுக்கு முழுமையான சேதம்

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாட்டில் 6164 வீடுகளுக்கு முழுமையான...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபாவிற்கு மிகைப்படாத விசேட...