Date:

“நான் பதுளையில் இருந்து வரும் போது எனது வாகனத்தில் டீசல் இல்லை”- தொழில் அமைச்சர்

“நான் பதுளையில் இருந்து வரும் போது எனது வாகனத்தில் டீசல் இல்லை; முழு நாட்டு மக்களும் இறுகி போயுள்ளனர். எங்கும் டீசல் கிடைப்பதில்லை” என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கடுமையாக கொள்கையை கையாண்டு வருவதால், முழு நாட்டு மக்களும் தற்போது கடும் இறுக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் அரசாங்கம் பிறர் கூறும் எதனையும்கேட்பதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பதுளை வெலிமடை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.

இந்தியாவிடம் ஒரு பில்லியன் டொலரை கேட்டுள்ளோம். அதில் எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டது. நாளை வேறு முறையில் இதனை செய்ய வேண்டும்.

இவ்வாறு நாளாந்தம் வாழ்க்கை ஓட்டும் பொருளாதார நிலைமையே காணப்படுகிறது எனவும் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதுளையில் இருந்து வெலிமடை நோக்கி சென்ற வாகனத்தில் டீசல் இருக்கவில்லை என்பதால், இடையில நின்று போனதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 79வது சுதந்திர தினம்

ஏ.எஸ்.எம்.ஜாவித் . 2025.08.14 பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 79வது ஆண்டு விழா இன்று இலங்கையில்...

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்

கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன...

BOC, ITN உட்பட பல அரச நிறுவனங்களுக்கு புதிய தவிசாளர்கள் நியமனம்

முக்கிய அரச நிறுவனங்களுக்கு நான்கு புதிய தலைவர்களை நியமிப்பது உட்பட பல...