நேற்று தனியார் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் ஊழியர்கள் சிலர் நிலாவெளி கடற்கரைக்கு சென்று நீராடிக் கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவன் இன்று சடலமாக கரையொதுங்கியுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலாவ – தம்பகஹவெல, பத்தியமுல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதான கே.என்.நளின் பிரியன்த என்பவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.
கடற்படையினரும், உப்புவெளி பொலிஸ் உயிர்காக்கும் பிரிவினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் இளைஞரை மீட்க முடியாமல் போன நிலையிலேயே இளைஞரின் சடலம் இன்றைய தினம் கரையொதுங்கியுள்ளதாக தெரியவருகிறது.