டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகாித்து வரும் நிலையில், 60 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிகூடிய எச்சாிக்கை வலயங்களாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது.
கடந்த முதலாம் திகதியிலிருந்து 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 925 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து 7ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 634 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 51 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.