நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, சிறையில் இருந்தவாறு என்ன செய்து வருகிறார் என்ற தகவலை சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய வெளியிட்டுள்ளார்.
பதுளை சிறைச்சாலைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த சிறைச்சாலைகள் ஆணையாளரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான தொழிற்நுட்ப உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் அவர் இணையத்தளம் வழியாக பட்டப்படிப்புக்கான கல்வியை மேற்கொண்டு வருகிறார் எனவும் உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.