Date:

சைக்கிளோட்டப் போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு கௌரவிப்பு

இன்று மாலை மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் இன ஐக்கியத்தை வலியுறுத்தி நாடு தழுவிய சைக்கிளோட்டத்தை முன்னெடுத்துள்ள அம்பாறை மாவட்டம் பொத்துவில் பகுதியை சேர்ந்த‌ சுல்பிகார் என்பவரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட் புர்கான் மாலை அணிவித்து உபசரித்து கௌரவமளித்தார்.

கடந்த 12 ஆம் திகதியன்று இலங்கை திருநாட்டின் 74வ‌து சுத‌ந்திர‌ தின‌த்தை முன்னிட்டு இன‌ங்க‌ளுக்கிடையில் ஐக்கிய‌த்தை வ‌லியுறுத்தி நாடு முழுவ‌தும் த‌னிந‌ப‌ராக‌ 1407 கிலோமீட்ட‌ர் சைக்கிள் சவாரியை இவர் கொழும்பு சுத‌ந்திர‌ ச‌துக்க‌த்திலிருந்து ஆர‌ம்பித்திருந்தார்.

குறித்த ஆரம்ப நிகழ்வில் ச‌ர்வ‌ம‌த‌ த‌லைவ‌ர்க‌ளின் ஆசீர்வாத‌த்துட‌ன் சைக்கிள் சவாரி ஆரம்பமாகி கொழும்பிலிருந்து யாழ்ப்பாண‌ம், கிளிநொச்சி, திருகோண‌ம‌லை, க‌ல்முனை,பொத்துவில், ஹ‌ம்பாந்தோட்டை ஊடாக‌ கொழும்பை சென்றடையவுள்ளது.

நான்காவது நாளான இன்று குறித்த சைக்கிளோட்ட வீரர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட் புர்கானினால் கௌரவிக்கப்பட்டு எதிர்காலத்தில் இலங்கையில் நடாத்தப்படவுள்ள தேசிய சைக்கிள் மரதனோட்ட போட்டியில் இணைத்து கொள்வதற்கு ஆவண செய்வதாக அவரிடம் வாக்குறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எம்.பி பதவியை இராஜினாமா செய்த பிரதியமைச்சர் ஹர்ஷண

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை...

கெஹெலியவின் மகளுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜெயனிகா...

ஹட்டன் கண்டி பிரதான வீதியில் அதிரடி சோதனை

ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் நேற்று (19) பயணித்த இலங்கை...

ஆசியாவின் ”யானைகளின் சந்திப்பு” ஹபரணையில்….

நாட்டின் இயற்கை செல்வங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி, சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாத்தல்,...