Date:

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு-டீசலுடன் இலங்கை வந்த இந்திய கப்பல்

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 40, 000 மெற்றிக் டன் டீசல் அடங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.

கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இதன்போது, கருத்து தெரிவித்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க முன்வந்திருந்ததாக குறிப்பிட்டார்.

எனினும், அந்த கடனை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஆகியவற்றை சுட்டிக்காட்டி இந்தியாவிடம் இருந்து உடனடியான உதவிகளை கோரியிருந்தோம்.

இதனை கருத்திற்கொண்டு 40,00 மெற்றிக் டன் டீசல் அடங்கிய கப்பல் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய் தொடர்பில்…

5 முதல் 19 வயதிற்கிடைப்பட்ட மாணவர்களே டெங்கு தொற்றாளர்களில் அதிகளவானோர்  என...

கம்மன்பில CID முன்னிலையில்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப்...

மேல் மாகாணத்தில் அதிகரித்துவரும் நோய்கள்; கோவிட் பரவல் குறித்து வெளியான தகவல்

கோவிட்-19 பரவல் குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார...

வாகன உறுதிப்படுத்தல் வலைத்தள வசதி குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவதற்கு முன், தனிநபர்கள் அவற்றின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373