Date:

தளர்வான வணிகச் சூழல் பணமோசடி செய்பவர்களுக்கு துறைமுக நகரம் சிறந்த புகலிடமாக இருக்கும்- பெர்னாட் பெர்னாண்டோ

தளர்வான வணிகச் சூழல் பணமோசடி செய்பவர்களுக்கு சிறந்த புகலிடமாக இருக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக தொழிற்சங்க தலைவர் பெர்னாட் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் 2017ஆம் ஆண்டு கடன் சுமை காரணமாக ஒரு துறைமுகத்தை வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேபோல கொழும்பு துறைமுக நகரமும் நீண்ட கால அடிப்படையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமாகிவிடும் அபாயம் உள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

“நமது நாட்டின் உள்நாட்டு வளங்களை சீனா பறித்து நம்மை கடனில் தள்ளியுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இவ்வாறான சூழலில் புதிய துறைமுக நகரத்தை உருவாக்கி வருகின்றனர்.
இந்த துறைமுகத்தால் எமது நாட்டிற்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

எமது நாட்டில் சீனாவின் உதவியுடன் வீதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  தற்போது அதிக எண்ணிக்கையிலான  வீதிகள் புனரமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்படுகின்றன.

ஆனால் அந்த வீதிகளில்  வாகனங்கள் ஓட்டுவதற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய நாட்டில் அந்நியச் செலாவணி இல்லாத நிலையில் சிலர் சைக்கிள்களைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த துறைமுக நகரம் நாட்டின் ஏழை மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் தரவில்லை. இதனால் சீனர்களுக்கு பயன் கிடைக்கின்றது.

இன்று இந்த பகுதிகளில் சீனர்களை அடிக்கடி காணக்கூடியதாக உள்ளது. இன்னும் 10 வருடங்களின் பின்னர் கொழும்பில் மாத்திரமல்ல முழு நாடும் சீனாவிற்கு சொந்தமாக  மாறி விடும்” என
தொழிற்சங்க தலைவர் பெர்னாட் பெர்னாண்டோ மேலும் கருத்து தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்

தற்போது கோழி இறைச்சியின் விலை அதிகரித்து, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி...

அதிகாலையில் இடம்பெற்ற பேருந்து விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு...

அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்...

ஈஸ்டர் தாக்குதல் – எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்...