Date:

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் தீப்பரவல்:சுற்றாடல் பாதிப்பை மதிப்பிட மூன்று ஆண்டுகள் தேவை!

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பல், தீப்பரவலுக்கு உள்ளானமையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை துல்லியமாக மதிப்பிடுவதற்கு, மூன்று ஆண்டுகள் அளவில் எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய சட்ட வல்லுநர்கள் குழுவொன்று இதனைத் தெரிவித்துள்ளதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில், மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அதனை அவுஸ்திரேலிய சட்ட வல்லுநர் குழுவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பவரலுக்கு உள்ளானமையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை மதிப்பீடு செய்த நிபுணர் குழுவுடன், அவுஸ்திரேலிய சட்ட வல்லுநர் குழு நேற்று இணையவழி நிகழ்நிலையில் நடத்திய சந்திப்பு ஒன்றின்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மருத்துவ வரலாற்றில் அழியாத தடம் பதித்த மாமனிதர் பேராசிரியர் ரிஸ்வி ஷெரீப்..!

இலங்கையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கி, “சிறுநீரக மருத்துவத்தின்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகொட ராஜினாமா!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் (SriLankan Catering)...

செவ்வந்தியின் பிறந்தநாளை கொண்டாடிய ​பொலிஸார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரொருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்...

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...