Date:

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் தீப்பரவல்:சுற்றாடல் பாதிப்பை மதிப்பிட மூன்று ஆண்டுகள் தேவை!

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பல், தீப்பரவலுக்கு உள்ளானமையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை துல்லியமாக மதிப்பிடுவதற்கு, மூன்று ஆண்டுகள் அளவில் எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய சட்ட வல்லுநர்கள் குழுவொன்று இதனைத் தெரிவித்துள்ளதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில், மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், அதனை அவுஸ்திரேலிய சட்ட வல்லுநர் குழுவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பவரலுக்கு உள்ளானமையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை மதிப்பீடு செய்த நிபுணர் குழுவுடன், அவுஸ்திரேலிய சட்ட வல்லுநர் குழு நேற்று இணையவழி நிகழ்நிலையில் நடத்திய சந்திப்பு ஒன்றின்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...

யானையிடம் இருந்து தப்பிய 3 வயது குழந்தை

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலில் 35...