ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷபல்வேறு துறைசார் தொழில் வல்லுநர்களை இன்று சந்தித்து கலந்துரையாடும் போது, பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை மற்றும் அதன் அளவு முக்கியமல்ல என குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் அதேவேளை, அபிவிருத்தியும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இரண்டு வருடங்களாக நாட்டை மூடி வைத்ததால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, தற்போது படிப்படியாக கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.
ஜனாதிபதி ஆரம்பித்துள்ள விவசாயத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக ஒத்துழைப்பை எவ்வேளையிலும் வழங்கத் தயார் எனவும் இதன்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியின் பயன்பாட்டின் அவசியம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள தொழில் வல்லுநர்கள், அதனை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு நிபந்தனையின்றி ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.