அம்பலாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அல்லது ஏனைய சர்வதேச சக்திகள் கைதிகள் தொடர்பான தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்காது’ என என குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,”அரச தலைவர் தனது கொள்கை அறிக்கையில் கைதிகளுக்கு புனர்வாழ்வு வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.கைதிகளை சுதந்திரமாக அவதானித்து அரச தலைவர் மன்னிப்பு வழங்குவார்” என்றார்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தமையிட்டு பல நாடுகள் இலங்கையை எதிர்ப்பதாகவும், அவர்கள் அரசுக்கு எதிராக எப்போதும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.