Date:

நுவரெலியாவில் சுகாதார ஊழியர்களின் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)

சுகாதார தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 5ஆவது நாளாகவும் தொடர்கிறது. பதவி உயர்வு , இடர்கால கொடுப்பனவு , சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்குமாறு கோரி நுவரெலியா மாநகர சபை மண்டபத்தில் இருந்து (சினிசிட்டா) ஆரம்பித்த ஊர்வலம் நுவரெலியா புதியக்கடை பாதையுடாக பிரதான பேருந்து நிலையம் வரை வருகைதந்து போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இப் போராட்டத்தில் ஈடுப்பட்ட சுகாதார தொழிற்சங்க ஊழியர்கள் பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தினை முன்னெடுத்தனர் இப் போராட்டத்தில் தாதியர், துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருந்துவ பொருட்கள் விநியோக சேவை ஊழியர்கள் என 700 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தீர்வை வழங்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது இப் போராட்டம் காரணமாக நுவரெலியா பிரதான நகர பகுதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டி.சந்ரு செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு...

ஜனாதிபதி வரப்பிரசாதம் (ரத்து) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு...

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று ஆரம்பம்

17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று (09) ஆரம்பமாகின்றது. தொடரின் ஆரம்ப ஆட்டத்தில்...

மின்சார தொழிற்சங்கங்களின் எச்சரிக்கை

மின்சார சபை ஊழியர்கள் தொடங்கிய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம்...