Date:

நுவரெலியாவில் சுகாதார ஊழியர்களின் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)

சுகாதார தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 5ஆவது நாளாகவும் தொடர்கிறது. பதவி உயர்வு , இடர்கால கொடுப்பனவு , சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்குமாறு கோரி நுவரெலியா மாநகர சபை மண்டபத்தில் இருந்து (சினிசிட்டா) ஆரம்பித்த ஊர்வலம் நுவரெலியா புதியக்கடை பாதையுடாக பிரதான பேருந்து நிலையம் வரை வருகைதந்து போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இப் போராட்டத்தில் ஈடுப்பட்ட சுகாதார தொழிற்சங்க ஊழியர்கள் பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தினை முன்னெடுத்தனர் இப் போராட்டத்தில் தாதியர், துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருந்துவ பொருட்கள் விநியோக சேவை ஊழியர்கள் என 700 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தீர்வை வழங்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது இப் போராட்டம் காரணமாக நுவரெலியா பிரதான நகர பகுதியில் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டி.சந்ரு செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட...

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு...