Date:

இலங்கையின் பொருளாதார நிலைமைகளை உன்னிப்பாக அவதானிக்கின்றோம்-சர்வதேச நாணய நிதியம்

இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

தமது பிரதிநிதிகள் அண்மையில் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்ததாகவும், இந்த விஜயம் தொடர்பில் நிறைவேற்று சபை கலந்துரையாட உள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இதுவரையில் அதிகாரபூர்வமாக நிதி உதவிகள் எதனையும் கோரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், கோரிக்கை விடுக்கப்பட்டால் பேச்சுவார்த்தை நடாத்த தயார் எனவும், இலங்கையின் பொருளாதார நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை அரசாங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம்

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட...

பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு

ரயில் ஒன்று தடம் புரண்டதால் பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு...