Date:

பொரளை மலர்ச்சாலை உரிமையாளர் ஒருவரின் வீட்டில் கொள்ளை

பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமையாளரின் வீட்டில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான  பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த சந்தேக நபர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் மலர்ச்சாலை உரிமையாளரின் வீட்டிற்குள் நுழைந்து 553,000 ரூபா பணம் மற்றும் தங்கச் சங்கிலி, மோதிரம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் மூன்றையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் நவகமுவ – கொரத்தொட்ட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.தாம் கொள்ளையிட்ட பணத்தை வைத்து சில பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த 6ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...