புதிய அரசியலமைப்புத் திருத்தத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான அதிகாரப் பகிர்வு இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்தியாவிலுள்ள ‘தி இந்து’ நாளிதழுக்கு நேர்காணல் வழங்கிய போதே வெளிவிவகார அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.